கோவை, ஜூன் 20- புதிய வரைவு கல்விக் கொள் கையின் பல அம்சங்கள், அடிப் படைகள், அதன் விளைவுகள் இந்திய கூட்டாட்சி முறைமைக்கு எதிரானதாகவும், சமூக நீதிக்கு எதி ரானதாகவும் உள்ளதாக கோவை மாவட்ட அறிவியல் இயக்க மாநாடு குற்றம்சாட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கோவை மாவட்ட அறிவியல் இயக்கத்தின் 16வது மாவட்ட மாநாடு கோவை பிஷப் அப்பா சாமி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்டத்தலை வர் அ.இராஜாமணி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் இரா.கண்ணபிரான் வரவேற்றார். மாநாட்டை துவக்கிவைத்து மாநில பொது செயலாளர் அ.அம லராஜன் பேசினார். இதனைத் தொடர்ந்து பொதுக்கருத்தரங்கம் மற்றும் பிரதிநிதிகள் மாநாடு நடை பெற்றது. மாநில செயலர்கள் முகமது பாதுசா, தியாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் ராம மூர்த்தி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். இதில் தலைவராக ரிசி.ச ரவணன், செயலாளராக ஸ்ரீராமகி ருஷ்ணன், பொருளாளராக ப.ப.க னகராசு உள்ளிட்ட 30 பேர் கொண்ட செயற்குழு மற்றும் மாவட்ட்டக்குழுதேர்வு செய்யப் பட்டது. முன்னதாக இம்மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கால் நூற்றாண்டுக்கு தாக்கத்தை உருவாக்கும் ஓர் ஆவ ணத்தை புதிய கல்விக் கொள்கை யாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது இந்திய கூட் டாட்சி முறைமைக்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிரானது. சம வாய்ப்புக்கு புறம்பானது. தமிழ் நாடு கல்வி வளர்ச்சி மூலம் பெற் றுள்ள முன்னேற்றத்தைப் பின் னோக்கி தள்ளுவதாகும். இது தொடர்பாக தமிழகத்தில் சிறப்பு சட்ட மன்ற கூட்டத்தைக்கூட்டி, அதில் இதுபற்றி விவாதித்து தீர்மா னம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், கோவை மாநகர நீர் மேலாண்மை தனியாருக்கு வழங் கப்பட்டதைக் கைவிடவும், நீர் மேலாண்மையில் தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய திட்டத்தை நீரியல் வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சுற்றுச்சூழ லாளர்கள், மேலாண்மை நிபுணர் கள் கொண்ட குழுவுடன் இணைந்து தமிழக அரசு தயாரித்திட வேண்டும் என்பன உள்ளிட்டதீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முடிவில் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம கிருஷ்ணன் நன்றி கூறினார்.