tamilnadu

img

சேலம் புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு

சேலம், ஜூலை 1- சேலம் மாவட்ட ஆட்சியராகப் பணி யாற்றி வந்த ரோகிணி இசைக் கல்லூரி பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய ஆட்சியராக சி.அ.ராமன் திங்களன்று காலை பொறுப்பேற்றார்.  இவர் தமிழ்நாடு வேளாacண்மை பல் கலைகழகத்தில் வேளாண்மை பாடப் பிரிவில் இளங்கலை பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் வருவாய் கோட்டாட்சியராகவும், மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றிய  பின், சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழகத்தில் பொதுமேலாளர் (நிர்வாகம்), ஆவின் இணை மேலாண்மை இயக்குநர் மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தில் துணை செயலாளராகவும் பல்வேறு பதவி களை வகித்துள்ளார். பின்னர் 2010 ஆம்  ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் நிய மனம் செய்யப்பட்டு, இந்திய ஆட்சிப் பணி அந்தஸ்தில் சென்னை நில நிர்வாக இணை ஆணையராகவும், பின்னர் 2016 முதல் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றினார். இவர் சேலம் மாவட் டத்தின் 172 ஆவது மாவட்ட ஆட்சியரா வார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவ லர் திவாகர் உள்ளிட்ட அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.