tamilnadu

img

காலதாமதமாக வந்த அமைச்சர் பயனாளிகள் அதிருப்தி

உதகை.நவ.20- உதகையில் நடைபெற்ற அரசு விழாவிற்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காலதாமதமாக வந்ததால் காத்திருந்த பயனாளிகள் அதிருப்தியடைந்தனர். நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பழங்குடி யினர் பண்பாட்டு மையத்தில் புதனன்று முதலமைச் சரின் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அனைத்திந்திய கூட்டுறவு சங்கத்தின்  66 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி டி.வினோத் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிக ளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்சியில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் ஆ.சாந்தி ராமு, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள்  ஒன்றிய தலைவர் அ.மில்லர், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் ஆ.பழனிச்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஜோ.வசந்தா, குன்னூர் நகர வங்கி மேலாண்மை இயக்குனர் டி. சித்ரா, கூட்டுறவு துறை துணைப்பதிவாளர் சி .ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா நன்றி கூறினார்.

பயனாளிகள் அதிருப்தி

முன்னதாக, இந்நிகழ்ச்சி காலை10.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதையொட்டி பயனாளிகளும் காலை 10 மணி முதலே நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்கு உள்ளே காத்திருந்தனர். ஆனால், மதியம் 12.30 மணி அளவிலேயே கூட்ட அரங்கிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வந்தார். குன்னூர், உதகை ஆகிய பகுதிகளில் அதிமுக கட்சி யினர்  நடத்திய வரவேற்பு நிகழ்ச்சிகளில்  அமைச்சர் கலந்துகொண்டு வந்ததாலேயே  இந்த காலதாமதம் ஏற்பட்டது. இதனால் சுமார் இரண்டரை மணி நேரமாக அமைச்சரின் வருகைக்காக முதியோர் உள்ளிட்ட பயனாளிகள் மற்றும் அரசு அதிகாரிகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. இதனால் பயனாளி கள் பலரும் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாண வர்கள் சிலர் கூறும்போது, மடிக்கணினியை பள்ளியி லேயே வழங்கி இருக்கலாம். தற்போது செமஸ்டர் எக்ஸாமுக்கு  படிக்க வேண்டியது நிறைய உள்ளது. இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு  எங்களை அழைத்து  வந்து எங்களின் நேரத்தை அரசு அதிகாரிகளே வீணாக்குகிறார்கள் என்று  ஆதங்கப்பட்டனர்.