வேலையின்மையின் அவலத்தை அம்பலப்படுத்திய நேர்காணல்
கோவை, நவ. 28 - மாநகராட்சியில் காலியாக உள்ள துப் புரவு பணியாளர் வேலைக்கான நேர்காண லுக்கு பொறியியல் உட்பட பல பட்டதாரி இளைஞர்கள் குவிந்து, வேலையின்மை யின் தீவிரத்தை வெளிச்சம் போட்டு காட் டியுள்ளது. கோவை மாநகராட்சியில் இரண் டாயிரம் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களைத் தவிர இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் 549 நிரந்தர துப்புரவு பணியாளர் இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைய டுத்து இப்பணியில் சேர்வதற்கு சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண் ணப்பித்தனர். இவர்களுக்கான நேர் காணல் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் புதனன்று துவங்கியது. இரண்டாவது நாளான வியாழனன்றும் நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பணிக்கான கல்வி தகுதி தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று நிர் ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேர்காண லுக்கு டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள், முதுநிலை பட்டங்கள் பெற்றவர்கள் மற் றும் பொறியியல் பட்டதாரிகள் என பலர் குவிந்தனர். இந்த நேர்காணலுக்கு வந்த பட்டதா ரிகள் கூறுகையில், படித்த படிப்பிற்கு நல்ல வேலை கிடைப்பதில்லை. அப்படியே ஏதே னும் ஒரு வேலை கிடைத்தாலும் நிரந்தர மாக இருப்பதில்லை. தற்போதுள்ள பொரு ளாதார நெருக்கடியில் குடும்பத்தை சமா ளிக்க முடியாமலும், நிரந்தர வேலை வேண்டும் என்பதற்காகவே இந்த துப்பு ரவு பணியாளர் வேலைக்கு விண்ணப் பித்திருப்பதாக ஆதங்கத்துடன் தெரிவித் தனர்.