tamilnadu

img

மருத்துவ ஆணையத்தை தொடர்ந்து தமிழக அரசு எதிர்க்கும்

கோவை, ஆக.13- தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கவும், நெக்ஸ்ட் தேர்வுக் கும் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்து உள்ளார். கோவை அரசு மருத்துவ மனையில் எடை குறைவாக பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு நீமோகாக்கல் தடுப்பூசி மற்றும் மருத்துவமனையில் ரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவு செவ்வா யன்று துவங்கப்பட்டது. இதனை சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஒருங்கிணைப்பாளர் காந்திமதி,  மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி,  அரசு மருத்துவமனையின் முதல்வர் அசோகன்‌ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   இதனைத்தொடர்ந்து சுகா தாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் முதல் முறையாக 1.5 கிலோ கீழ் எடை குறைவாக அரசு மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தை களுக்கு   நீமோகாக்கல் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. ஒரு  தடுப்பு ஊசி ரூ.4 ஆயிரம், நான்கு ஊசிகள் ரூ.16 ஆயிரம். இது இலவசமாக போடப்படுகி றது. மேலும், கோவை அரசு மருத்துவமனையில் புதியதாக  ரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவு  துவங்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கவும், நெக்ஸ்ட் தேர்வுக் கும் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். மேலும்,  மத்திய அரசிடம் தமிழக அரசின் நிலைப் பாடு குறித்து தெரிவித்து உள் ளோம். இலவச அமரர் ஊர்த்தியை தனியாருக்கு மாற்றும் எண்ணம் இல்லை. பச்சிளம் குழந்தை கள் இறப்பு விகிதம் இந்திய அளவில் ஆயிரத்திற்கு 34 என்ற  அளவில் இருந்தது. தமிழகத்தில் இது பாதியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு  ஒரு சதவிகிதம் குறைந்தது உள்ளது. இதனை மேலும் குறைக்கும் வகையில் இந்த தடுப்பூசி போடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.  முன்னதாக,  உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனை யில்  நர்சிங் மாணவிகள் பங் கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம், நானும் ஒரு கொடையாளி என்ற செல்பி எடுக்கும் நிகழ்வு நடை பெற்றது.

நர்சிங் பயிற்சி பள்ளி முதல்வருக்கு மெமோ

கோவை நர்சிங் மாணவிகளுடன் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, நர்சிங் மாணவிகளிடம் அரிசின் சுகாதாரதுறை மூலம் அரசு மருத்துவமனையில் செயல்படுத்தி வரும் திட்டங்கள், அம்மா பேபி கேர் கிட்டில்  எவ்வளவு பொருட்கள் உள்ளது தொடர்பாக மாணவிகளிடம் கேள்வி எழுப்பினார்.  அதற்கு மாணவிகள் முறையாக விளக்கம் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து நர்சிங் பயிற்சி பள்ளியின் முதல்வர் (பொ) தனலட்சுமி அழைத்து விளக்கம் கேட்டார். அவரிடமும் அரசு திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அவர் பதில் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து முதல்வர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார். அவருக்கு 17ஏ மெமோ அளிக்க அறிவுறுத்தினார்.