tamilnadu

img

வெள்ளி கொலுசு மெருகு போடும் இடத்தில் தீ விபத்து

சேலம், மே 17-சேலம் அருகே வெள்ளி கொழுசு மெருகு போடும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினரின் முயற்சியால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.சேலம் செவ்வாய் பேட்டை பகுதியானது வெள்ளி கொலுசு மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள மிக முக்கியமான வர்த்தக நிறுவன பகுதி ஆகும். இந்த பகுதியில் வெள்ளியன்று காலை முருகன் என்பவருக்கு சொந்தமான வெள்ளி கொலுசு மெருகேற்றும் நிலையத்தில் கொலுசுகளுக்கு மெருகு போட்டுக்கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் இருந்து வெளியேறிய எரிபொருள் கசிவினால் சிலிண்டர்கள் தீ பற்றி எரிந்தன. உடனே பணியாளர்கள் அனைவரும் வெளியேறினர். தகவலறிந்த சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து சிலிண்டர்களில் எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.இதனால் மிகப்பெரிய அசம்பாவிதம்தவிர்க்கப்பட்டது.இருப்பினும், இந்த தீ விபத்தில் இருவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் நிறைந்துள்ள இந்தபகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.