திருப்பூர், அக். 14 – திருப்பூரில் சிஐடியு சங்கத் தைச் சேர்ந்த தொழிலாளர்கள் போனஸ் கோரியும், போனஸ் வழங்க நிறுவனங்கள் காலதாம தம் செய்வதைக் கண்டித்தும் திங்களன்று பேரணி நடத்தினர். திருப்பூர் தியாகி குமரன் நினை வகம் முன்பிருந்து இந்த பேரணி தொடங்கியது. ஊத்துக்குளி சாலை, டிஎம்எப் பாலம் வழியாக பிரிட்ஜ்வே காலனி சாலையின் வழியாக லட்சுமி நகர் சந்திப்பை வந்தடைந்தனர். இந்த பேரணி யில் பனியன், உள்ளாட்சி, மோட் டார், போக்குவரத்து, பாத்திரம், இன்ஜினியரிங், கட்டுமானம் உள்பட பல்வேறு தொழில்களில் வேலை செய்யும் தொழிலாளர் கள், பெண் தொழிலாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு போனஸ் வழங்கக் கோரி முழக் கங்களை எழுப்பி வந்தனர்.
பேரணியின் நிறைவாக லட் சுமி நகர் பிரதான சாலை சந்திப் பில் நடைபெற்ற கண்டன ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு பனியன் பொதுத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் தலைமை வகித்தார். இதில் போனஸ் கோரிக்கையை வலி யுறுத்தி சிஐடியு மாவட்டத் தலை வர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ் ஆகியோர் உரையாற்றினர். அவர்கள் பேசும்போது கூறி யதாவது: திருப்பூரில் ரூ.2000 கோடி அளவுக்கு பனியன் வர்த் தகம் நடந்தபோதும், தற்போது 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பனியன் ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகம் நடக்கும்போதும் தொழிலாளர்களுக்கு மனமுவந்து போனஸ் வழங்கியதில்லை. போனஸ் என்பது தொழிலா ளர்கள் முதலாளிகளிடம் பெறும் யாசகம் அல்ல, அது அவர்களது சட்டப்படியான உரிமை. போனஸ் கேட்கும்போது தொழில் நெருக்கடி என காரணம் சொல்லும் முதலாளிகள் ஜிஎஸ்டி வரி விதிப்பு, மூலப்பொருள் விலை ஏற்றம் என அரசின் கொள்கை சார்ந்த எந்த பிரச்சனையிலும் தொழில் நெருக்கடி பற்றி பேசுவ தில்லை. ஆனால் காலமெல்லாம் உழைத்துக் கொடுக்கும் தொழிலா ளர்களிடம் மட்டும் இதைப் பற்றி பேசி போனஸ் வழங்க காலதாம தம் செய்வது, இழுத்தடித்து ஏமாற்ற நினைப்பதை ஏற்க முடி யாது.
பனியன் தொழிலில் மட்டு மல்ல, பாத்திரம், இன்ஜினியரிங், விசைத்தறி, மோட்டார் என அனைத்துத் தொழில்களிலும் தொழிலாளர்களுக்கு உடனடி யாக போனஸ் வழங்க வேண்டும். முதலாளிகள் மட்டுமின்றி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய ஊதியம், போனஸ் உரிமைகளை தராமல் மறுக்கும் நிலை உள்ளது. இதை ஏற்க முடியாது. பண்டிகைக்கு 12 நாட்களே இருக்கும் நிலை யில் உடனடியாக எல்லா தொழில் களிலும் நிரந்தர மற்றும் ஒப் பந்த தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும். போனஸ் உரிமைக்காக தொழி லாளர்கள் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். போனஸ் தராமல் இழுத்தடிக்கும் நிறுவனங்களாக இருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளாக இருந் தாலும் வேலைநிறுத்தம் உள்பட போராட்டங்களை நடத்தி போனஸ் பெற முயற்சிப்போம் என்று கூறினர்.