கண்ணூர், ஆக.28- மத்திய அரசு நிறுவன மான ‘இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணையம்’ (என்எச்ஏஐ) தலச்சேரி – மாஹி புறவழிச் சாலையில் நிட்டூருக்கு அரு கில் பாலம் கட்டுமானத்தை மேற்கொண்டுள்ளது. தூண் களை இணைக்கும் சிமின்ட் பீம்கள் தகர்ந்து விழுந்தன. இதுகுறித்த தகவல் வந்த தும் ஆணையத்திடம் அறிக்கை கேட்டுள்ளதாக கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் ஜி.சுதாகரன் தெரி வித்தார். ஆனால் சில ஊடகங்க ளும், எதிர்கட்சியும் இதை கேரள அரசின் தவறு என்பது போலவும், பாலாரிவட்டம் போன்ற முறைகேடு எனவும் மாநில அரசின் மீது பொய் யான தகவல்களை கூறி பிரச்சாரம் செய்து வரு கின்றன.