முதல்வர் பங்கேற்பு
சேலம், செப்.29- சேலத்தில், ஞாயிறன்று ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் புதிய நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பங்கேற்றார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் திருமண நிதி உதவி யுடன் தாலிக்கு தங்கம், பணியாளர் களுக்கு அலைபேசி வழங்கும் விழா மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட முதல்வர் பேசுகையில், சேலம் மாவட்டத்தின் பெண்கள் நலனுக்காக அதிகப்படியான நலத்திட்டங்களை செய்து வருவது அம்மா அரசு எனவும், தமிழகத்தில் பட்டதாரி அல்லாத பெண் களுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கமும் 4 கிராம் தங்கமும், பட்டதாரி பெண் களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கமும் 8 கிராம் தங்கமும் இதுவரை வழங்கப் பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு வரை ரூ.4 லட்சத்து 79 ஆயிரத்து 271 பட்டதாரி பெண்களுக்கும், ரூ.6 லட்சத்து 76 ஆயிரத்து 73 பட்ட தாரி அல்லது பெண்களுக்கும், ஆயி ரத்து 500 ரூபாய் உதவி செய்யப் பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் இதுவரை 5770.7 2 கிலோ தங்கம் 3,956 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார். சேலம் மாவட்டத்தில் பெண் களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆறாயிரம் பெண்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இவர்களுக்கு 18.7 கோடி ரூபாயில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் படும். இவர்களுக்கு படிப்படியாக இந்த வருடத்தில் 6 ஆயிரம் பெண்கள் இந்த உதவி சென்றடையும் எனவும் தெரிவித்தார். இதில் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன், அரசு உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். முன்னதாக, பயனாளிகள் குறிப் பிட்ட நேரத்தில் வந்து காத்திருந்தனர். ஆனால் இரண்டு மணி நேரம் கால தாமதமாக முதல்வர் வந்து விழாவில் கலந்து கொண்டார்.