tamilnadu

img

சமூக நலத்துறையின் சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

கோபிசெட்டிபாளையம், செப். 29- கோபிசெட்டிபாளையத்தில் சமூக நலத்துறையின் சார்பில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் விழா வில் ரூ.2 கோடியே 11 லட்சம் மதிப்பிலான தங்க நாண யங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங் கினார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலத்துறையின் சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சி.கதிர வன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏழை பெண்களின் தாய்மார்கள் 298 பேருக்கு ரூ.2 கோடியே 11 லட்சம் மதிப்பிலான தங்க நாணயங்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார். இவ்விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், பெண்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கு ரூ.240 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் அந்நிய முதலீடு களை அதிகளவு ஈட்டியுள்ளது. தமிழக அரசு தண்ணீர்  பற்றாக்குறையை போக்க ஏரி, குளங்கள் தூர்வாரப்பட் டுள்ளது. மேலும், பள்ளிக் குழந்தைகளின் படிப்பிற்காக 14 பொருட்களை இலவசமாக தந்து படிக்க வைக்கும் அரசு தமிழக அரசு என தெரிவித்தார். இவ்விழாவில் துறை அதிகாரிகள் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.