கோபி, ஜூலை 21- மாணவர்கள் இல்லாத பள்ளிகளில் தற்காலிக நூல கங்கள் அமைக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நம்பியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப் போது அவர் கூறியதாவது, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நவீன நடமாடும் கால்நடை மருத்துவமனை செயல்படுத்தப்படும். கோபி அரசு மருத்துவமனையில் இலவசமாக நோயாளிகள் டயாலிஸ் செய்ய மூன்று கருவி கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு நாளில் 12 பேருக்கு இலவசமாக சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. 2013 மறறும் 14 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வெழுதி பணி வாய்ப்புக்காக 82 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தப்படும். அதில் பாடவாரியாக தேர்வு செய்யப்பட்டு பணி வாய்ப்பு வழங்கப்படும். கடம்பூர் கிராமத்தில் மாணவர்களுக்கு எற்பட்டுள்ள தொண்டை அடைப்பான் நோய்க்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. குடிநீர், உணவு, சுகா தாரம் ஆகியவற்றை குழந்தைகள் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விளாங்கோம்பை மலைவாழ் மக்கள் கிராமத்திற்கு முதலில் சாலைகள் அமைக்கப்படும். அதன் பின்னர் ஆரம் பப்பள்ளி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தாண்டு 1 லட்சத்து 68 ஆயிரத்து 414 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் இல்லாத 45 பள்ளிகளில் தற்காலிக நூலகங்கள் அமைக்கப்படும். அரசு பள்ளிகளை அனைவரும் ஊக்கப்படுத்தினால் மட் டுமே பள்ளிகளை மேம்படுத்த முடியும். வரும் கல்வியாண் டில் காலணிகளுக்குப் பதில் சாக்சுடன் ஷு வழங்கப்படும். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என அமைச் சர் தெரிவித்தார்.