tamilnadu

கோவை மாநகராட்சியில் எச்டிஎப்சி வங்கியுடன் இணைந்து வரி வசூல்

கோவை, பிப். 23- கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டல அலுவ லகத்தில் மாநகராட்சியுடன் எச்டிஎப்சி வங்கியுடன் இணைந்து அனைத்து வரிவசூல் பணிகளையும் கையடக்க இயந்திரம் மூலம் மேற்கொள்ளும் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செய லாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.       இந்நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமை வகித் தார். மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராம சாமி முன்னிலை வகித்தார்.  கோவை மாநகராட்சியின் 29 வரிவசூல் மையங்களிலும் கையடக்க இயந்திரம் மூலமாக சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணங்களை வங்கி கடன் அட்டை (கிரடிட் கார்டு) வங்கி பற்று அட்டை (டெபிட் கார்டு)  வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) மற்றும் ரொக்கமாக வசூல் செய்யும் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வரிவசூலர்களுக்கு கையடக்க இயந்திரங்களை வழங்கி, தொடங்கி வைத்தார். மேலும், கியோஸ்க் இயந்திரம் மூலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், புதிய முயற்சிகளை ஊக்கு விக்கும் வகையில் கோவை மாநகராட்சியின் மேம்பாட்டுப் பணிகளை குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் மக்கள் அறிந்து கொள்ளும் இயந்திரத்தின் செயல்பாடு களையும், மழைநீர் சேகரிப்பு செயலியின் மூலம் கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வீடுகளிலும் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பின் செயல்பாட்டினை கண் காணித்து மற்றும் அதன் நிலைக்கேற்ப மாநகராட்சி நிர்வா கம் நடவடிக்கை எடுக்க உதவும் செயலியின் செயல்பாட்டி னையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்து, பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மண்டல உதவி ஆணையர்கள் தி.ரா.ரவி, செந்தில்குமார் ரத்தினம், ம.செல்வன், உதவி ஆணை யர் (கணக்குகள்) சரவணன் மற்றும் உதவி வருவாய் அலு வலர்கள், எச்டிஎப்சி வங்கி அலுவலர்கள் கலந்து கொண் டனர்.