முதல்வரின் வெற்று வாக்குறுதியா? தருமபுரி மக்கள் கேள்வி
தருமபுரி, அக். 6- தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை கிடப்பில் போட்டதாக பொது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தருமபுரி நகராட்சி சார்பில் 1980 ஆம் ஆண்டு, 3.9 ஏக்கரில் புறநகர் மற்றும் 1.78 ஏக்கரில் நகர பேருந்து நிலையமும் கட்டப்பட்டன. இப் பேருந்து நிலையத்தில் 83 பேருந்துகள் மட்டுமே நிறுத்தும் அளவிற்கு இட வசதி உள்ளது. தற் போது சேலம், ஈரோடு, பெங்களூரு, திருச்சி, கோவை உள்ளிட்ட பல் வேறு புற நகரங்களுக்கும், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, ஒகேனக்கல் நகர் பகுதிகளுக்கும் நாள்தோறும் 532 பேருந்துகள் இங்கிருந்து சென்று வருகின்றன. இந்நிலையில், 40 ஆண்டு களை கடந்த இப்பேருந்து நிலை யத்தைச் சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் நெரிசல் மிகுதியால் சிக்கித் தவிக்கின்றன. தருமபுரி நகராட்சியின் பரப்பளவு ஒரு கிமீ சுற்றளவாகும். இதில் அரசு பள்ளிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் முக்கிய கடை வீதி பகுதியில் அமைந்துள்ளது. இதனால் தருமபுரி நகரம் போக்கு வரத்து நெரிசலில் சிக்கி உள்ளது. இதையடுத்து நெரிசலைத் தவிர்க் ்கவும், பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப நவீன வசதி களுடன் கூடிய பேருந்து நிலையம் அமைத்திட நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது. இதைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அமைப் பதற்கான கோப்புகள் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், தனியார் பங்களிப்பு நிதியுடன் பேருந்து நிலையம் அமைப்பதற்கு அரசு முடிவு செய்தது. இதையடுத்து, தரும புரியைச் சேர்ந்த தனியாரிடமிருந்து பேருந்து நிலையம் அமைக்க சுமார் 10 ஏக்கர் நிலம் தானமாக பெறப்பட்டது. இந்த இடம் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ் சாலைக்கு அருகில், தருமபுரி-பென்னாகரம் மாநில நெடுஞ் சாலையையொட்டி அமைந் துள்ளது.
இந்நிலையில் 2017ஆம் ஆண்டு தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தனியார் பங்களிப்பு நிதியுடன் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தானமாக பெற்ற இடத்தை நகராட்சி ஆணையர் பெயருக்கு பதிவு செய்து, மண் பரிசோதனை, பேருந்து நிலையத்தின் மாதிரி தோற்றம் வரைபடம் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தருமபுரி நக ராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட் டது. மேலும் தருமபுரி சோகத்தூரில் தனியார் பங்களிப்புடன் ரூ.39.14 கோடியில் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அரசா ணையை தமிழக அரசு வெளி யிட்டுள்ளது. தொடர்ந்து, கட்டு மான பணிகள் நடக்கும் என்ற நிலையில் புதிய பேருந்துநிலையம் கட்டுமான பணிகளை தமிழக அரசு, மாவட்ட நிர்வாகமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சொன்ன வாக்குறுதி, வெற்று வாக் குறுதியா? என தருமபுரி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.