தரங்கம்பாடி நவ.22- நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காட்டுச்சேரி ஊராட்சி காலனித் தெரு பகுதியில் பேருந்து நிறுத்தம் கட்டித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கோரிக்கையை ஏற்று அப்பகுதி யில் புதிதாக கட்டப்பட்ட பதிய பேருந்து நிறுத்த கட்டிடத்தை எம்.எல்.ஏ பவுன்ராஜ் திறந்துவைத்தார். மேலும் சமத்துவப்புரத்தில் அம்மா உடற்பயிற்சி இளைஞர் விளையாட்டு அரங்கத் திற்கான துவக்க விழா, திருவிளையாட்டம் ஊராட்சி குமாரமங்கலம், கீழ்மாத்தூர்,முக்கரும்பூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடங்கள், கொத்தங்குடி கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டிடம் ஆகியவற்றையும் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், ஒன்றிய ஆணையர் அருண், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ஜனகர், மனோகரன், கலை வாணன், பொறியாளர் விஜயன்,பணி மேற்பார்வையாளர்கள் ராஜேஷ், ராஜலெட்சுமி, ஊராட்சி செயலர்கள் செல்வராணி, செந்தமிழ்செல்வி, சற்குணம், மாலினி ஆகியோர் உடனிருந்தனர்.