tamilnadu

img

அய்யம்பாளையம் விவசாய தியாகிகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நினைவஞ்சலி

திருப்பூர், ஜூலை 5- 1972 ஜூலை 5ஆம் தேதியன்று ஒரு பைசா மின் கட்டண உயர் வுக்கு எதிராக போராடி துப்பாக்கி  சூட்டில் உயிர் நீத்த விவசாயி களின் தியாகிகள் ஏ.ஆர்.சுப்பையன், என்.முத்துகுமாரசாமி ஆகியோர்களுக்கு பல்லடம் கே. அய்யம்பாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் நினை வஞ்சலி  செலுத்தப்பட்டது. வெள்ளியன்று இந்த விவசாயத் தியாகிகளின் நினைவு தினத்தில் விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர் வை.பழனிச்சாமி தலை மையில்  விவசாயிகள் சங்க மாநில  உதவித் தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், நிர்வாகிகள் எஸ்.பரம சிவம், சுப்பிரமணியம் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத் தினர். 

;