கோவை, ஜூன் 18- மத்திய பட்ஜெட்டில் சிறுகுறுந் தொழில்களை பாதுகாக்க அதிகப் படியான ஜிஎஸ்டி வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கோப்மா சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து அக்கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, கோவை மாவட்டத்தில் மோட்டார் பம்ப் செட் உற்பத்தி தொழில் தனி சிறப்பு வாய்ந்த தொழிலாக விளங்கு கிறதை நீங்கள் அறிவீர்கள். மோட்டார் பம்ப்செட் மற்றும் அதன் உதிரிபாகங்கள் மீது முன்பு இந்தியா முழுமைக்கும் வாட் வரியில் 5 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்கப் பட்டிருந்தது. மேலும் ஜிஎஸ்டிக்கு முன்பு சிறு குறுந்தொழில்களுக்கு ரூ1.5 கோடி வரை கலால் வரி விலக்க அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 12 முதல் 28 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படுகிறது. குறுந்தொழில் களுக்கு என்று ஜிஎஸ்டி வரிவிதிப் பில் சிறிதுகூட சலுகை காட்டப் படவில்லை. இதனால் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பின் ஆயிரக் கணக்கான சிறுகுறு தொழில் முனை வோர்கள் மிகக் கடுமையான அள விற்கு பொருளாதார பின்ன டைவைச் சந்தித்து வருகின்றனர். வரி விதிப்பின் மூலம் ஏற்படுகின்ற முதலீட்டு கடனின் பொருளாதார சுமையைத் தாங்க முடியாத இஞ்ஜினியரிங் தொழில் சார்ந்த குறுந்தொழில் முனைவோர்கள் பலர் இத்தொழிலை விட்டே விலகி விட்டனர். பனியன் தொழிலில் ஜாப் ஒர்க் மீது ஜிஎஸ்டி வரிவிதிப்பு 5 சத விகிதமாக உள்ளது. ஆனால் இஞ்ஜி னியரிங் ஜாப் ஒர்க் தொழில் களுக்கு 18 சதவிகிதமாக உள்ளது. ஜிஎஸ்டியில் உள்ள இந்த ஒரு வேறுபாட்டையே தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம். இதுபோல் ஜாப் ஒர்க் செய்து தரு கின்ற கைத்தொழில்களுக்கு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து வரிவிதிப்பு ஏதும் இதுவரையில் விதிக்கப்பட்டதில்லை. எனவே ஜாப் ஒர்க் தொழில்கள் மீதான ஜிஎஸ்டி வரிகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். விவசாயத் திற்கும், குடிநீருக்கும் முக்கியக் கருவியாக விளங்கும் பம்ப் செட் மற்றும் உதிரிபாகங்கள் மீதான வரிவிதிப்பை 5 சதவிகித மாக குறைக்க வேண்டும். ரூ40லட்சம்வரை ஜிஎஸ்டி வரி யிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளதாக அரசு புள்ளி விபரங்கள் கூறினாலும் கூட ஏட்டளவில் மட்டுமே அது உள்ளது. நடைமுறையில் செயலாக்கம் இல்லாத அறிவிப்பாக இருக்கிறது. சிறு நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் எந்தவித சிறிய வேறுபாடு கூட காட்டப்பட வில்லை. கோவையில் கடந்த காலங் களில் தாங்கள் நடத்திய கலந்தாய்வு கூட்டங்களில், எங்கள் சங்கம் பங்குபெற்று நேரிடையாகவே சிறுகுறு தொழில் சார்ந்த எங்களின் பல கோரிக்கைகளை உங்கள் முன்வைத்தோம். அது எதுவும் இதுவரை நிறைவேற்றப்பட வில்லை என்பதை வருத்ததுடன் தெரிவிக்கிறோம். ஆகவே தாங்கள் வருகின்ற பட்ஜெட் கூட்டத்திலோ அல்லது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத் திலோ எங்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்று வீர்கள் என நம்புகிறோம். ஏற் கனவே கலால் வரி விலக்கு இருந்தது போன்று குறைந்தது ரூ.1.5 கோடி வரை உற்பத்தி மற்றும் விற் பனை செய்கின்ற தொழில்முனை வோர்களுக்கு ஜிஎஸ்டி வரிகளை மிகக்குறைந்த அளவிற்கு விதிக்கப் பட வேண்டும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.