tamilnadu

தூத்துக்குடியில்  சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை  புதிய எஸ்.பி. ஜெயக்குமார் பேட்டி

தூத்துக்குடி,ஜூலை 1- தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய எஸ்பியாக பொறுப்பேற்றுள்ள ஜெயக்குமார் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு வணிகர்கள் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர்  அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டு, காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர்.  தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு, விழுப்புரம் எஸ்பியாக இருந்த ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில்,தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பி ஜெயக்குமார் புதனன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பொதுமக்களுடன் காவல்துறை நல்லுறவுடன் செயல்படும்” என்று தெரிவித்தார்.3