tamilnadu

img

சுகாதாரே சீர்கேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக கொசுவலை போர்த்திக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை, நவ. 4- சுகாதாரத்துறையின் அலட்சியம் காரணமாகவே டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவுவதாக குற்றம் சாட்டி கொசுவலை போர்த்திக் கொண்டு கோவை மாவட்ட ஆட்சி யரிடம் திங்களன்று தமிழ்புலிகள் அமைப்பினர் மனு அளித்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல் வேறு பகுதியில் இருந்து வந்த பொது மக்கள் மனு அளித்தனர். தமிழ்புலி கள் அமைப்பினர் அளித்தா மனுவில், கோவை மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சுமார் 200 பேருக்கு மேல் கோவை அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாநகராட்சியில் துப்புரவு  பிரிவின் அலட்சியத்தால் தான் டெங்கு பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்.  மேலும் மாநகராட்சி மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து, டெங்குவை கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்கக்கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் புலி கள் கட்சியின் சார்பாக மனு அளிக்கப் பட்டது. முன்னதாக மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு வந்திருந்த இவ்வமைப்பினர் கொசுவலை போர்த்திக்கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், மற்றொரு மனுவில் கோவை வடவள்ளி ராஜீவ்காந்தி நகர் பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவகின்றனர். இப்பகுதியில் உள்ள மயானத்தில் மாநகராட்சி கழிவுகளை கொட்டி செல் வதால் சுகாதாரமற்ற நிலையில் உள் ளது. கழிவுகளுடன், கட்டிட கழிவுக ளும் கொட்டப்படுவதால் விஷ பிராணி கள் வசிப்பிடமாக மயானம் மாறி  உள்ளதாகவும் அங்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொட் டிக்கிடக்கும் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.  சாதியற்றோர்- தனிப்பிரிவு வடவள்ளி பகுதியை சேர்ந்த இளை ஞர்கள் சிலர் சாதியற்றோர் என்கிற தனிப்பிரிவை உருவாக்க வலியுறுத்தி மனு அளித்தனர். இதுகுறித்து இளை ஞர்கள் கூறுகையில், சாதி அடையாள மற்ற சமூகமாக தமிழ்சமூகம் இருந்த தாக பல்வேறு வரலாற்று ஆதாரங்கள் உள்ளது. ஆனால் சாதி பாகுபாட் டால் பல்வேறு மோதல் சம்பவங்கள்  நடைபெறுகிறது. பல்வேறு தரப்பை சார்ந்த இளைஞர்கள் நாங்கள் சாதிய அடையாளத்தை எதிர்க்கிறோம்.  ஆனால் இதற்கான அங்கிகாரம்  கிடைப்பதில்லை. பள்ளியில் பிள் ளைகளை சேர்க்கும்போது சாதியற்ற வர் என விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தாலும் பல்வேறு கேள்விகளை  எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள் ளது. ஆகவே அரசே சாதியற்றவர் என் கிற தனிப்பிரிவை உருவாக்கினால் சாதிய அடையாளத்தை எதிர்ப்பவர் களுக்கு உதவிகரமாக இருக்கும். ஆகவே இளைஞர்கள் நாங்கள் முடி வெடுத்து இப்படியான மனுவை ஆட் சியரிடம் அளிக்க வந்தோம் என தெரி வித்தனர்.

;