tamilnadu

img

பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் வீணாகும் வரட்டுப்பள்ளம் அணையின் உபரி நீர்

கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கனமழை  காரணமாக அந்தியூர் வரட் டுப்பள்ளம் அணை முழுமையாக நிரம்பி அக்.21 ஆம் தேதி இரவு முதல் அதன்  உபரிநீர் வெளியேறத் துவங்கிவிட் டது. அக். 22 ஆம் தேதியன்று காலை  ஒரு பகுதி தண்ணீர் கெட்டிசமுத்திரம் ஏரியை வந்தடைந்துவிட்டது. இன்னும்  வடகிழக்கு பருவமழை வளமாக  இருப்பதற்கான இயற்கைச் சூழ்நிலை மிகவும் சாதகமாக உள்ளதையே அதன் சமிக்ஞையின் மூலம் வானம் நமக்கு காட்டுகிறது. பர்கூர் வனக்காடுகள்  பசுமைக் கூத்தாடுவதை நேரில் காண முடிந்தது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் உபரி தண்ணீர் வெளியேறும்போது அந்தத் தண்ணீர் முழுமையும் கெட்டிசமுத்திரம் ஏரி, ராசாங்குளம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி  ஏரி, ஆப்பக்கூடல் ஏரி என பல நீர் நிலைகள் நிரம்ப பிரகாசமான வாய்ப் புள்ளது. ஆனால் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வெளியேறும் உபரி தண்ணீர் மேற்சொன்ன அனைத்து  ஏரிகள் வரை செல்லவேண்டிய “நீர் வழிப்பாதை” என்பது பொதுப் பணித்துறையால் முறையாக தூர் வாரப்பட்டோ அல்லது பராமரிப்பு பணி கள் செய்யப்பட்டோ, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டோ இருப்பதாக தெரிய வில்லை.

அந்த நீர்வழிப்பாதைகள் “பள் ளங்கள்” என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. அந்த பள்ளங்கள் புதர்கள் மண்டி தடம் தெரியாமல் மூடி மறைந்துள்ளது என்று உள்ளூர் பொது மக்கள் வேதனைப்படுகின்றனர். இப் போது நினைத்தால்கூட ஓரிரு நாளில் அந்த பள்ளங்களின் புதர்கள், மண் மேடுகளை அவசர உணர்வுடன் உட னடியாக பொதுப்பணித்துறையால் அகற்ற முடியும் என்றும் மக்கள் கூறு கின்றனர். ஆனால், வரட்டுப்பள்ளம் அணை யில் இருந்து வெளியேறும் உபரித் தண்ணீரானது அதன் சரியான இலக்குகளான மேற்கண்ட ஏரிகளை உடனடியாகச் சென்று அடைய முடியாமல் தனது பாதை தனக்கே தெரியாமல் திக்குதிசை இல்லாமல் பரவலாக புதுவழிகளை தேடி வருவ தால் ஏரிகளும் நிரம்பாமல், தண்ணீ ரும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த பத்தாண்டுகளாக குடிநீருக்கே படாதபாடு பட்டுக்கொண் டிருக்கும் வறண்ட பகுதியில் வசிக்கும் அந்தியூர் மக்களுக்கு, வாராது வந்த  மாமணியைப் போன்று இந்தாண்டு  (2019) மழைத் தண்ணீரை இயற்கை  கொடையாக வழங்க தயாராவதா கத் தெரிகிறது. அதேநேரம், மழைநீரை  வீணாக்காமல் முறையாக அந்தியூர் வட்டார ஏரிகளுக்கு கொண்டு சேர்த்து  சேமிக்கும் பணியை பொதுப்பணித் துறைதான் மேற்கொள்ள வேண்டும். மழைத்தண்ணீர் உபரியாக கிடைக்கும் நேரத்தில் புத்திசாலித்தன மாக ஏரிகளில் சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தினால் கிணறுகளி லும், ஆழ்துளைகளிலும் நீர்மட்டம் உயரும். இதனால் அந்தியூர் பகுதி விவ சாயம் வளம்பெறும். பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் பஞ்ச மும் தீருவதுடன், மீனவர்கள் வாழ்க்கை யிலும் நம்பிக்கை பிறக்கும்,  வேலை வாய்ப்புகளும் மக்களுக்கு பரவலாக கிடைக்கும் என்பதே இப்பகுதி மக்கள் அனைவரின் விருப்பமாக உள்ளது. தமிழக அரசு மனது வைத்தால் மக்கள் விருப்பம் நிச்சயம் நிறைவேறும்.

ஆர்.முருகேசன், அந்தியூர்.