tamilnadu

மே 4-இல் கோடை வெயில் தொடக்கம்

சென்னை, ஏப்.24-ஒவ்வொரு ஆண்டும் 21 நாட்கள் முதல் 26 நாட்கள் வரை கோடை வெயில் நீடிக்கும். இந்த ஆண்டு மே 4 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை மொத்தம் 26 நாட்கள் நீடிக்கிறது.கோடை வெயில் தொடங்கும் போது முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகும். 21 வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு படிப்படியாக வெயில் குறையத் தொடங்கும்.கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 100 டிகிரியில் தொடங்கி108 டிகிரி வரை சென்றது. திருத்தணி, வேலூர், கரூர் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தஆண்டு கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில் அதிகபட்சமாக 107 டிகிரிவரை சுட்டெரித்து வருகிறது. வெயில் உக்கிர காலத்தில் உடலில் வெப்பம் அதிகரிக்கும். சீரான வெப்ப நிலை இல்லா தவர்களுக்கு வயிற்றுப் போக்கு, சிறுநீரகக் கோளாறு போன்ற உபாதைகள் ஏற்படும்.தற்போது குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வெளி மண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ஊட்டி போன்ற மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் இந்த மழை நீடிப்பதால் சற்று வெப்பம் தணிந்துள்ளது. ஆனாலும் அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில்வெயிலின் தாக்கம் உக்கிர மாகவே இருக்கும் என வானிலைமைய அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.

;