மருந்துகள் எரிந்து சேதம்
இளம்பிள்ளை, மே 20- இளம்பிள்ளை அருகே மெடிக்கல் கடையில் திடீரென இரவில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.2 லட்சம் மதிப்பிலான மருந் துகள் எரிந்து சேதமாகியது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பெருமா கவுண்டம்பட்டி பகுதியில் விஸ்வநாதன் (44) என்பவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் செவ் வாயன்று இரவு மருந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் சுமார் 1 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியே வந்துள்ளது. இதனை அறிந்த அருகில் உள்ள பொது மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இது குறித்து சங்ககிரி தீயணைப்பு காவலர்கள் விசாரித்து வரு கின்றனர்.