tamilnadu

மானியத் தொகை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிப்பு

நாமக்கல், ஆக.27 - நாமக்கல் மாவட்டத்தில் நீர்வடிப்பகுதி மேம் பாட்டு திட்டத்தின் மூலம் விவசாய நிலங்களில் நீர்  குட்டை அமைப்பதற்கான மானியத் தொகை கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து  கிடைக்காததால் விவ சாயிகள் பரிதவித்து வருகின்றனர். நுண்ணீர்  பாசன மேலாண்மை தகவல் அமைப்பு  (எம்ஐஎம்ஐஎஸ்) தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் விவசாய பயிர் சாகுபடி நிலங்களில் நீராதாரங்களை சேமிக்க நீர் குட்டை அமைக்கும் திட்டம் 10.2.2017 முதல் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தின்படி விளை நிலங்களில்  12  அடி ஆழமும், 22 அடி வட்ட தொட்டியும் அமைப் பதற்கு மானியத் தொகை ரூ.40 ஆயிரமும், மோட்டார் அமைத்திட ரூ.15 ஆயிரமும் மற்றும் அனைத்து  பகுதிகளுக்கு  நீர் கொண்டு செல்ல பைப் லைன் அமைப்பதற்கு ரூ.10 ஆயிரம் உட்பட ஆக மொத்தம் ரூ.65 ஆயிரம்  மானியத் தொகை சிறு, குறு விவ சாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், திருச்செங்கோடு வட்டம், எலச்சி பாளையம் ஒன்றியம், தொண்டிபட்டி கிராமம், சுள்ளிக் காடு விவசாயி முத்தான் மகன் கந்தன் என்பவர் கடந்த  2018ஆம் ஆண்டு  இத்திட்டத்தை செயல்படுத்தி யற்காக மானியத்திற்கு விண்ணப்பித்து இருந்தார். அதன்படி 21.01.2019 அன்று மானியத் தொகை ரூ.56850.80 ஒதுக்கீடு செய்யப்பட்டதாக உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மானியத்தொகை இது வரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். இதே போல் மாவட்ட நீர் பிடி அலுவலகத்தில் முறை யிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மேலும், இதுகுறித்து விசாரித்தபோது, அலுவலகத்தில் நிரந்தர அதிகாரி இல்லாத காரணத்தினால் இவர்களுக்கான நிதியை ஒதுக்க முடியாமல் உள்ளது எனவும், இதற்கான நிதி இருந்தும்  தற்போது வரை இவர்களுக்கு வங்கியில் பரிமாற்றம் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம். இன்னும் சில தினங்களில் மானியத் தொகை வழங்கு வதாக  தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி கந்தன் கூறியதாவது, நாமக்கல் மாவட்டம் கடுமையான வறட்சியால் விவ சாயம் ஒரு பகுதி அளிந்து வரும் சூழ்நிலையில், இத்திட்டம் அமைக்க அரசு வழங்கும் மானியத்தில் அமைக்க வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில், குறைந்த பட்சம் ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்தால் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும்.  மேலும்  கடன் பெற்றுத்தான் இத்திட்டத்தை நிறை வேற்றிய நிலையில்,  அரசு உரிய மானியத் தொகை  தராததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளேன். எனக்கு சேர வேண்டிய மானியத் தொகையை உடனடி யாக வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட  ஆட்சியரிடம் இரு முறை கோரிக்கை மனு கொடுத் தேன். பின்னர்  மாவட்ட நீர் வடி அலுவலகத்திற்கு பலமுறை நேரில் சென்று முறையிட்டும், மானியத் தொகை வழங்காமல் உள்ளனர் என வேதனையோடு தெரிவித்தார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சு.சுரேஷ் கூறியதாவது,  இதுகுறித்து நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று முறையிட உள்ளோம். மேலும் அரசு வழங்கக்கூடிய மானியத் தொகையை பெற்று சிறிய அளவிலான விவசாய பயிர்களை பயிரிட்டு வாழ்ந்து வரும் நிலையில், இதுபோன்ற காலதாமதத்தால் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் முழுவதும் நீர் மேலாண்மை குறித்தும், நீர் ஆதாரங்கள் குறித்தும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.  எனவே விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் மானியத்தொகை கிடைக்காத நிலையும் நீடிக்கிறது. இந்நிலையில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக மானியத் தொகை வழங்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நீர்வடிப்பகுதி நாமக்கல் அலுவலகம் முன்பு விவ சாயிகளுடன் போராட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.