tamilnadu

img

ஆசிரியர்களின் அறிவுரையை மாணவர்கள் கேட்கவேண்டும்

மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பேச்சு

தருமபுரி, பிப்.21- ஆசிரியர்களின் அறிவுரையை மாணவர்கள் கேட்க வேண்டுமென தருமபுரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பீ.ஆர்.ஜெமினி கூறியுள்ளார். அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட் டத்தின் கீழ்  விலையில்லா கண் கண்ணாடிகள் வழங்கும் விழா, பள்ளி தலைமையாசிரியர் குழந்தைவேல் தலை மையில்  நடைபெற்றது. இந்த விழாவில், தருமபுரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பீ.ஆர்.ஜெமினி பேசியதாவது, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் உயர்ந்த  நிலைக்கு வர முடியும். அரசுப் பள்ளிகளில் சிறந்த ஆசிரி யர்கள் உள்ளனர். இதே அரசுப் பள்ளியில் தான் நான்  படித்தேன். தற்போது மருத்துவ துறையில் உயர் அதிகாரி யாக உள்ளேன்.  எனது வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள் என்னுடைய ஆசிரியர்கள்.  பள்ளி ஆசிரி யர்கள் சொல்லும் அறிவுரைகளை மாணவர்கள் மதிக்க வேண்டும். ஆசிரியர்களின் கட்டளைகளுக்கு கீழ் படிந்து  நடந்தாலே உங்கள் அனைவருக்கும் வெற்றி நிச்சயம். மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் நாள் தோறும் வருகை தர வேண்டும். சரியான நேரத்துக்கு வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டும். நாள்தோறும் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை அன்றைய தினமே படித்துவிட வேண்டும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாண வர்களுக்கு மடிக்கணினி, கண் கண்ணாடிகள், சத்துணவு, மிதிவண்டிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நல உதவிகள் வழங்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் அரசு அளிக்கும் திட்டங்களை நன்றாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டும் என்றார்.  முன்னதாக, அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 49 மாணவர்களுக்கு கண் கண்ணாடி களை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அரூர் மாவட்ட கல்வி அலுவலர் பொன் முடி, வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.தொல்காப்பியன், பள்ளிகளின் ஆய்வாளர் பொன்னுசாமி, கண் மருத்துவ உதவியாளர் கு.கலையரசன்,  பள்ளி ஆசிரியர்கள் நித்யா, முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.