இளம்பிள்ளை, அக்.15- சேலம் அருகே உள்ள இடங்கணசாலை பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பாது காப்பு கேட்டு காவல்நிலை யத்தில் புகார் மனு அளித் தனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை கிராமம் இ.மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் விசைத்தறி தொழிலாளியாக உள்ளார். இவருக்கு நளினா என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். இந்நிலையில், இதே பகுதியை சேர்ந்த யுவ ராஜ் குடும்பத்தினர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து மீண்டும் அதே நிலத்தை திருப்பி கேட்டு யுவ ராஜா குடும்பத்தினர் தொடர்ந்து கொலை மிரட்டலும், அச்சுறுத்தலும் செய்து வரு வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜா குடும்பத்தினர் மகு டஞ்சாவடி காவல் நிலையத்தில் யுவராஜ் குடும்பத்தினர் மீது பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க எடுக்க வில்லை. இதனால் ராஜாவின் மகள்கள் ஒன்றரை மாதங்களாக பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் உள்ளனர். இந்நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு ராஜாவின் மகள்கள் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் சசிகுமார் பெற்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.