tamilnadu

img

வாழும் இடத்திற்கே பட்டா கொடு அல்லது நகரத்தில் உள்ள அரசு நிலத்தில் குடியமர்த்து

கோவை, ஆக. 20 –  வாழும் இடத்திற்கே பட்டா கொடுக்க வேண்டும், இல்லையேல் நகரத்திற்குள் ளேயே அரசு நிலத்தில் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் தலைமையில் குடிசை மாற்றுவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நகரத்தில் வாழும் எழை எளிய உழைப்பாளி மக்களை அப்புறப்படுத்தும் சர்வாதிகார நடவடிக்கையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் தொடரும்  அநீதிக்கு எதிராக இம்மக்கள் தொடர்ந்து  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வாழும் இடத்திற்கே பட்டா வேண்டும். இல்லையேல் நகரத்தில் உள்ள அரசுத் துறைக்கு சொந்தமான நிலத்தில் குடியமர்த்த வேண்டும் என்கிற கோரிக் கையை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யு னிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை யில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக செவ்வாயன்று கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டு இயக்கத்தில் ஈடுபட்டனர். பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமையில் நடைபெற்ற போராட் டத்திற்கு முத்தண்ணன்குளம், குமாரசாமி காலணி, சங்கனூர் சாலை, சண்முகாநகர், பூசாரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர்.

இதனையறிந்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். அதிகாரிகள் வரும்வரை காத்திருப்பது என அனைவரும் குடிசை மாற்று வாரிய அலுவலக வளாகத்திலேயே அமர்ந்தனர். இதனையடுத்து வந்த அதிகாரிகள் வருகிற 30 ஆம் தேதியன்று பேச்சுவார்த்தை நடத்த உறுதியளித்தனர். இதனையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.  முன்னதாக நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் கூறுகையில், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் வாழ் வாதார பிரச்சனையில் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. நாங்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கை நியாமான கோரிக்கையாகும், அரசுக்கு சொந்தமான நிலங்கள் கோவை நகரத்திற்குள்ளேயே உள்ளது. இதில் இம்மக்களை குடியமர்த்த வேண்டும். அல்லது இருக்கும் இடத்திலேயே பட்டா வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக் கைகளுக்கு அரசு செவிசாய்க்கும் வரை எங்களது போராட்டம் தீவிரமடையும் என்றார்.  முன்னதாக இந்த போராட்டத்தில் திமுக பகுதிகழக செயலாளர் குப்புசாமி, மதிமுக நிர்வாகிகள், சிபிஎம் சார்பில் ராதா, ராஜன், சிபிஐ சந்திரன், மோகன், சிபிஐ (எம்எல்) கட்சியின் எம்.எஸ்.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இனி யன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர் வாகிகள் பங்கேற்றனர்.