tamilnadu

img

சேலத்தில் மாமேதை காரல் மார்க்ஸ் சிலை

பிரகாஷ்காரத் இன்று திறக்கிறார்

சேலம், அக். 20-  மனித குலத்தின் வழிகாட்டி மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களின் வெண்கல சிலையை சேலம் சிபிஎம் அலுவலகத்தில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் இன்று திறந்துவைக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு துவக்க விழா மற்றும் மனித குலத்தின் வழிகாட்டி மாமேதை காரல் மார்க்ஸ் சிலை திறப்பு விழா, பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சேலம் சிபிஎம் மாவட்ட குழு அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு துவங்குகிறது. இதில் மாமேதை காரல் மார்க்சின் சிலையை அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் திறந்து வைத்து சிறப் புரையாற்றுகிறார். கட்சியின் சிபிஎம் சேலம் மாவட்ட செயலாளர் பி.இராமமூர்த்தி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி வரவேற்புரையாற்றுகிறார். இதில் சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. தங்கவேல், பி. செல்வசிங், மாநில குழு உறுப்பினர் ஏ.ராதிகா, தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார்,  ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.உதயகுமார் நன்றியுரையாற்றவுள்ளார்.  மேலும் காஞ்சிபுரம் புது வினை தப்பாட்டம் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.