tamilnadu

img

ஜூலை 28ல் சமையல் கலை தொழிலாளர் மாநில மாநாடு

கோவை, ஜூலை 24-  சமையல் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 28 ஆம் தேதி 8-வது மாநில மாநாடு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இச்சங்கத்தின் தலைவர் முத்து புதனன்று கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், சமையல் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைப்பது. வீடு இல்லாத சமையல் தொழி லாளர்களுக்கு அரசின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கி தருவது. மருத்துவ காப்பீடு வழங்கு வது. இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் கலை மாமணி விருது வழங்கும்போது சிறந்த சமையல் தொழி லாளர்களுக்கும் விருது வழங்க வேண்டும் என சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.  இதனடிப்படையில்,  எங்களது “7 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி” வரும் ஜூலை 28 ஆம் தேதியன்று  சங்கத்தின் 8-வது மாநில மாநாடு கோவையில் நடை பெற உள்ளது. இம்மாநாட்டில் மாநிலம் முழுவதும் சமை யல் கலை தொழிலாளர் பங்கேற்க உள்ளனர். இவ் வாறு அவர் கூறினார். முன்னதாக, இந்த செய்தியாளர் சந்திப்பில் பொதுசெயலாளர் சேதுபதி, பொருளாளர் பி.சுப்பிரமணி, மாவட்ட அமைப்பாளர் சமையல் சக்கர வர்த்தி ஏ.நாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.