சென்னப்பட்டணத்தில் புகழ் ழ்பெற்ற மனிதர்கள் பெயரால் தெருக்கள் அமைந்திருப்பதைப் போன்றே, பெருந்தெய்வங்கள் குடி கொண்டிருக்கும் கோயில்களின் பெய ராலும், சிறு தெய்வங்களின் பெயராலும் ஏராளமான தெருக்கள் உள்ளன. சென்ன கேசவப்பெருமாள், சென்ன மல்லீஸ்வரர் ஆலயங்கள் கறுப்பர் நகரின் மிகப் பழமையான ஆலயங்கள் என்பதை நன்கறிவோம். அவ்வாறே மயிலையில், திருவல்லிக்கேணியில், கோமளீஸ்வரன் பேட்டையில் உள்ள ஆலயங்கள் மிகப் பழமையானவையாகும். இவ்வாலயங் களை சுற்றி நாற்புறமும் அமைந்துள்ள தெருக்கள் மாட வீதிகளாகவோ, ராஜ வீதிகளாகவோ அல்லது ரத வீதிகளாகவோ அறியப்பட்டு வருகின்றன. பெருந்தெய்வங்கள் குடிகொண்டுள்ள ஆலயங்களைச் சுற்றியுள்ள வீதிகள் நாற்திசையின் அடிப்படையில் பெயிரி டப் பட்டுள்ளன. இவை ஆலயத்தின் தேர் செல்லும் வகையில் மற்ற வீதி களைக் காட்டிலும் அகலமாகவும், நேர் கோட்டில் பெரும் திருப்பங்கள் இன்றி யும் அமைந்துள்ளன. கபாலீஸ்வரன் கோயில் வடக்கு மாடவீதி, பார்த்தசாரதி கோயில் கிழக்கு வாயில் ஆகியவற்றின் பண்டைய படங்கள் பட்டணத்தில் மக்கள் இருந்திருக்கிறார்களா என்ற ஐயத்தை எழுப்ப வல்லது. திருவல் லிக்கேணி, மயிலை ஆகிய இடங்களில் மட்டுமின்றி அயன்புரம், பாடி, திரு வான்மியூர், வில்லிவாக்கம் போன்ற இடங்களில் ஆலயங்களைச் சுற்றி அமைந்துள்ள நான்கு மாடவீதிகள் இன்றைய தினம் பெரும் ஆக்கிரமிப்புக் குள்ளான சிறப்பினைப் பெற்ற கடைத் தெருக்களாக உள்ளன. பட்டணத்தில் உள்ள சிறு தெய்வங் களுக்கான கோயில்கள் இத்தகைய மாடவீதிகளை கொண்டிருப்ப தில்லை என்பது முக்கியமானதொரு அம்ச மாகும். கோயிலைச் சார்ந்த ஒற்றைத் தெருக்களாகவே இவைகள் அமைந் துள் ளன. சில இடங்களில் முதல் தெரு, இரண்டாவது தெரு என்ற வரிசையி லும் இவை அமைந்துள்ளன. மாநக ராட்சியின் நகர தெருப்பட்டியலில் கிட்டத்தட்ட நான்கா யிரம் தெருக்கள் அம்மா அல்லது அம்மன் என்ற பெயரைக் கொண்டிருக்கின்றன. இதிலும் தனி நபர்கள் பெயரில் உள்ள அம்மா அல்லது அம்மாள்களை நீக்கி னால் மூவாயிரம் தெருக்கள் அம்மன் தெருக்களாகவே இருக்கின்றன. இந்நிலையில் பட்ட ணத்தில் இத்தெய்வ வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று அழைப் பது குறித்து நாட்டாரியல் ஆய்வா ளர்களைத்தான் அணுக வேண்டும்.
சாதி இந்துக்களின் தெய்வங்களும், விளிம்பு நிலை அல்லது ஒடுக்கப்பட்ட மக்களின் தெய்வங்களும் லூர்து மேரி ராஜேஸ்வரி எனும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ஆடிப்பாடல்களிலோ அல்லது திரைப்பாடல்களிலோ கோர்வையாக இருக்க முடியும் ஆனால் நடைமுறையில் இத்தகைய கோர்வை கிடையாது என்பதை தெருக்கள் உணர்த்துகின்றன. அங்காளம்மா, பாலியம்மா, பங்காரம்மா, பவானியம்மா, எல்லை யம்மா, ஏகவல்லியம்மா, கங்கையம்மா, காடம்பாடியம்மா, காளியம்மா, கன்னியம்மா, கருக்காத்தம்மா, மங்கம்மா, மாரியம்மா, முண்டக்கண்ணியம்மா, நாகவல்லியம்மா, பச்சையம்மா, பட வட்டம்மா, பத்ரகாளியம்மா, பிடாரி யம்மா, பெரியபாளையத்தம்மா, பொன்னியம்மா, சீயாத்தம்மா, சேணி யம்மா, சோலையம்மா, செங்காணியம்மா, சேமாத்தம்மா, தாந்தோணியம்மா, திருவீதியம்மா, வேம்புலியம்மா, உய்யாளி அம்மா போன்ற அம்மாக்க ளின் பெயரால் நகரில் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று மூவா யிரத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் இருக்கின்றன. இந்த அடிப்படையில் இத்தெய்வங்களுக்கான கோயில்களும் நகரில் இருக்கின்றன என்பது முக்கி யத்துவம் வாய்ந்ததாகும்.
மாடவீதிகளைக் கொண்டிருக்கும் கோயில்களுக்கும், இத்தகைய கோயில்களுக்கும் தொலை வில் மட்டுமல்ல பண்பாட்டியல் அடிப்படை யிலும் இடைவெளி இன்றும் இருந்து வருவதோடு அகண்டு வருவதும் உண ரத்தக்கது. இன்றைய தினம் ஒற்றைக் கலாச்சார தாக்குதல்களிலிருந்து இத் தெய்வ ங்களையும் வழிபாட்டு முறை களையும் காக்க வேண்டியிருக்கிறது. இல்லையேல் நமச்சிவாயா, மாரியம்மா என்பதற்கு பதில் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் மட்டுமே என்பது சொல்லப்படாத விதி யாக மாறக்கூடிய அபாயமும் உள்ளது. பண்டைய தமிழ்நாட்டுக் கிரா மங்களில் கிராமதேவதையாக ஐயனார் கோயில்கள் இருந்து வந்திருக்கின்றன. இக்கோயில்களில் பிரம்மாண்டமான அளவில் ஐயனாரும், அவரின் பாது காவலர்களும் குதிரையில் அமர்ந்தி ருக்கும் சுடுமண் பொம்மைகள் வர்ணம் பூசப்பட்டு இருப்பதைக் காண முடியும். பல்வேறு கிராமங்கள் ஒருங்கிணைந்த சென்னப் பட்டணத்தில் இத்தகைய ஐயனார் வழிபாடோ அல்லது அதன் சுவடுகளோ இல்லாதது மட்டுமல்ல, சதுக்கப் பூதத்திற்கான கோயில்கள் இல்லாததும் வியப்பளிக்கிறது, சதுக்கப் பூத வழிபாடு குறித்து சிலப்பதிகாரத்தில் பெரிதும் பேசப்படு கின்றது. நான்கு தெருக்கள் கூடுமிடத்தி லுள்ள ஒரு தெய்வம் இதுவென்பதையும், வஞ்சிமாநகரிலும் கருவூரிலும் வழி பாட்டுக்குரியவையாக இவை இருந்ததை யும் சிலப்பதிகாரம் உணர்த்துகின்றன. தவம் மறைந்து ஒழுகும் தன்மையிலாளர் அவர் மறைந்து ஒழுகும் அவல்பெண்டிர் அறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர் பொய்க்கரியாளர் புறங்கூற்றாளர், என் கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக் காதம் நான்கும் கடும்குரல் எடுப்பிப் பூதம் புடைந்து உணும் பூத சதுக்கமும் (128-134) என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.
- ராமச்சந்திர வைத்தியநாத்