கோவை, செப்.6- கோவை அரசு மருத்துவ மனையில் உள்ள மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன லீனியர் ஆக்ஸ்லேட்டர் கருவி வந்துள்ளது. கோவை அரசு மருத்துவ மனையில் மண்டல புற்று நோய் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். தினமும், புற்றுநோய் பாதிப்பினால் 60க்கும் மேற் பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை மையத்திற்கு ரூ.15 கோடியில் புற்றுநோய் பாதிப்பிற்கான நவீன சிகிச்சை கருவிகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதில், காலதாமதம் ஏற் பட்டு வந்தது. இதனால், தற்போது வரை புற்றுநோய் சிகிச்சை பிரிவில் உள்ள கோபால்ட் என்ற பழைய ரேடியோதெரபி கருவியை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில், தற்போது புற்றுநோய் சிகிச் சைக்காக அமெரிக்காவில் இருந்து தனி யார் மருத்துவமனைக்களுக்கு நிகரான மிகவும் அதிநவீன வசதிகளுடன் கூடிய லீனியர் ஆக்ஸ்லேட்டர் கருவி வந்துள்ளது. இது மிகவும் குறைந்த அளவிலான கதிர்வீச்சு தன்மை கொண்டது. இதன் மூலம் புற்றுநோய் கட்டிகளை மிகவும் துல்லி யமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். மேலும், 3டி முறையில் படம் பிடித்து அறிந்து, துல்லியமான சிகிச்சையை, குறைந்த கதிர்வீச்சில் அளிக்க முடியும். இந்த கருவியை பொருத்தும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். பின்னர், ‘ஏஇஆர்பி’ என்ற அணுசக்தி கட்டுப் பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி பெறப்பட்டு நோயாளிகளின் பயன் பாட்டிற்கு கருவி கொண்டு வரப்பட வுள்ளது. மேலும், மண்டல புற்நோய் மைய கட்டடத்தில் ஒரு சில பணிகள் முடிக்கப் படாமல் இருக்கிறது. இந்த பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் முடிக் கப்பட்டு வரும் டிசம்பர் மாதம் முதல் மண்டல புற்றுநோய் மையம் முழு வீச்சில் செயல்பட மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை அரசு மருத்துவ மனையின் முதல்வர் அசோகன் கூறுகை யில், இந்த அதிநவீன லீனியர் ஆக்ஸ் லேட்டர் கருவி மூலம் மிக சிறந்த சிகிச் சையை நோயாளிகளுக்கு அளிக்க முடியும். தற்போது வந்துள்ள கருவியை பொருத்தும் பணிகள் நடக்கவுள்ளது. மேலும், கருவி செயல்பாடு தொடர்பான பயிற்சிக்காக மருத்துவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். விரைவில் கருவிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.