tamilnadu

img

சாலையோர மரங்கள் வெட்டி சாய்ப்பு சமூக ஆர்வலர்கள் கண்டனம்

அவிநாசி, செப். 13- அவிநாசி அருகே சாலையோர மரங் கள் வெட்டப்பட்டதற்கு சமூக ஆர்வ லர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவிநாசி ஒன்றியம், மங்கரசுவளை யம் ஊராட்சிக்குட்பட்ட பேரநாயக்கன் புதூர்  புதுக்காலனி பகுதியிலுள்ள சாலை யோரம் பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் புதனன்று  இங்குள்ள மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி யினரிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் செல்வராஜ் என்பவர் கூறுகையில், 8 ஆண்டுகளாக சாலையோரம் வேப்பமரம், பூவரச மரம் மற்றும் வாகை மரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை பராமரித்து வந் தோம். இதனை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிச் சாய்த்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளோம் என தெரிவித்தார்.

;