சேலம், அக.15- முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஏபிஜே.அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி செவ்வாயன்று நடைபெற்றது. முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி சேலம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சி.அ.ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி வள்ளுவர் சிலை, பெரியார் சிலை, அரசு மருத்துவமனை சாலை வழியாக மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நிறைவு பெற்றது. இந்தப் பேரணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேருந்து நிலையம் முன்பாக டாக்டர் அப்துல்கலாம் 89ஆவது பிறந்தநாள் விழா கொண்டா டப்பட்டது.
இதில் இளைஞர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு அப்துல்கலாம் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள், நோட்டு, பென்சில் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், சேலத்தில் காந்தி, காம ராஜர் நற்பணி மன்றம் மற்றும் கலாம் நண்பர்கள் இயக்கம் இணைந்து சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு அப்துல் கலாம் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் கன்ஸ்யூமர் வாய்ஸ் பவுண் டேசன் நிறுவனத்தலைவர் ஜெ.எம்.பூபதி, கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் கோவை சுந்தரம் ஜெனிஸ் அகாடமி நிறுவனர் கர்லின் எபி உள்ளிட்டு கலாம் நண்பர்கள் இயக்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் சிறப்பாகக் கொண் டாடப்பட்டது. இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவரின் திருவுரு வப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அறிவியல் வளர்ச்சிக் கும், நாட்டிற்கு அவர் ஆற்றிய அரும் பணிகளையும் ஆசிரியர் வே.சங்கர் எடுத்துக்கூறினார்கள். ஆசிரியர் காம ராஜ் நன்றி கூறினார்.