tamilnadu

img

தாராபுரம் ஆலடிக்களம் அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை

தாராபுரம், ஜூன் 14- தாராபுரம் அடுத்த ஆலடிக்களம் அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை யால் விவசாயம், குடிநீர் திட்டங்கள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜமா பந்தியில் விவசாயிகள் மனு  அளித்துள்ளனர். தாராபுரம் அடுத்துள்ள ஆலடிக்களம் பகுதியை சேர்ந்த விவசாயி சின்னச் சாமி தலைமையில் தாரா புரம் தாலுகா அலுவலகத்தில் நடை பெற்ற ஜமாபந்தியில் துணை ஆட்சி யரிடம் அளித்துள்ள மனுவில் கூறப் பட்டுள்ளதாவது, தாராபுரம், ஆலடிக்களம் அமராவதி ஆற்றுப்படுகை விவசாயிகள் ஆற்று நீரை நம்பி விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் மணல் குன்று கள் உள்ளதால் நிலத்தடி நீர் பாதுகாக்கப் பட்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு நீரா தாரமாக உள்ளது. மேலும் இப்பகுதியில் மணக்கடவு ஊராட்சி குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றின் மூலமாக சுமார் 15 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  இந்நிலையில் இந்த ஆற்றுப்படுகையில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதற்கு ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய நில உரிமையாளர்கள் பாதை அமைத்து வழித்தடம் ஏற்படுத்தி தந்துள்ளனர். இதை பயன்படுத்தி வண் ணாந்துறை வாய்க்கால் வழியில் உள்ள தனி யார் நிலங்கள் வழியாக மணல் கொள்ளை யில் ஈடுபடுகின்றனர். மேலும் பொதுப் பணித்துறை வாய்க்கால்களை சேதப் படுத்தி கனரக வாகனங்கள் செல்ல பாதை  அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப் பகுதியில் உள்ள மணல்குன்றுகள் அழிக் கப்பட்டு பாறை திட்டுகளாக காட்சி யளிக்கிறது. இதனால் குடிநீர் ஆதா ரங்கள் பாதிக்கப்படுவதோடு, விவ சாயமும் பாதிக்கப்படுகிறது.  எனவே உடனடி நடவடிக்கை எடுத்து நீராதாரத்தை பாதுகாக்கவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட துணை ஆட்சியர் பவன் குமார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்துள்ளார்.