tamilnadu

சேலம், நாமக்கல் முக்கிய செய்திகள்

சேலத்தில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்  

சேலம், செப்.10- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி இடமாற்றம் செய்யப்பட்டதை கண் டித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  இந்த இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் செவ்வாயன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இதன்ஒருபகுதியாக, சேலம் நீதிமன்றத்தில் வழக் கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத் தில்  3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

பழிவாங்கும் நோக்கத்துடன் போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்திடுக ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

நாமக்கல், செப்.10- ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஊழி யர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்துடன்  போடப் பட்ட வழக்குகளை ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தி நாமக்கலில் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப் பான ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடு பட்ட ஊழியர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் போடப்பட்ட வழக்கு மற்றும் ஒழுங்கு நடவடிக் கைகளை ரத்து செய்திட வேண்டும்.  தமிழ்நாடு  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் மா.இரவிச்சந்திரன் பணி இடைநீக்கம் செய்ததை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ம.கலைச்செல்வன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் செயலாளர் ஆர்.முருகேசன் முன்னிலை வகித்தார். பரமத்தி வேலூர் வட்டார செயலாளர் சீ.முருகேசன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கு.ராஜேந்திரபிரசாத், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் வி.இளவேந்தன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இர.மாதேஸ்  கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். முடிவில், மோகனூர் வட்டார தலைவர் ச.சுப்ரமணியன் நன்றி கூறினார்.

ரப்பர் தொழிற்சாலைகளால் பாதிப்பு- பொதுமக்கள் புகார் மனு

நாமக்கல், செப். 10- நாமக்கல் அருகே இயங்கி வரும் ரப்பர் தொழிற் சாலைகளால் பல்வேறு பாதிப்பிற்குள்ளாகி வருவ தாக கூறி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், அத்தனூர் பேரூராட்சி உடும்பத்தான்புதூர் கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி யில் தனியாருக்கு சொந்தமான பாலாஜி ரப்பர் தொழிற்சாலை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.  இந்த தொழிற்சாலைகளிலிருந்து இரவு நேரங்களில்  நஞ்சுத் தன்மை கொண்ட புகையை வெளியேற்றுவ தால் அந்த கிராமத்தில் உள்ள பொது மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு வருகிறது. மேலும் கழிவு நீர் தேங்குவதால் நிலத்தடி நீரும் பாதிப்படைந்து வரு கிறது. இதேபோல், காக்காவேரி பூசாரி பாளையம் கிரா மத்தில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் ஆலை  இயங்கி வருகிறது. இதன்காரணமாக அப்பகுதியி லுள்ள பொதுமக்கள் மற்றும் கல்லூரியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இந்த இரண்டு ரப்பர் தொழிற்சாலைகளிலும் மாசு  கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டு தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூட நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.