திருப்பூர், அக். 25- திருப்பூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இரண்டரை மாதங்களாக வேலை வழங்கப்படவில்லை என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் புகார் தெரிவித்தார். வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்ற பஞ்சலிங்கம் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள் உள் ளன. இதில் 1.89 லட்சம் பேர் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணிபுரிந்து வருகின்ற னர். இவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்வழி பாதைகள் தூர்வாருவது மற்றும் சுத்தம் செய்வது உட்பட பல்வேறு பணி களை செய்து வருகின்றனர். இவர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 170 லிருந்து ரூ. 229 வரை ஒரு நாள் ஊதி யம் வழங்கப்படுகிறது. ஏழை விவசாயத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளும் கணிச மாக பணியாற்றுகின்றனர். திட்டத்தில் பணியாற் றும் தொழிலாளர்களுக்கு மாவட்டம் முழுவதும் கடந்த ஆக. 2-ஆவது வாரத்துக்கு பிறகு சம்பளம் வழங்கப் படாமல் உள்ளது. கிராமப்புற பெண்களுக்கு பெரும் வருவாய் அளித்தது இத்திட்டமே. ஆனால் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், இவர்களுக்கு வழங்க வேண்டிய வருவாய் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக நிறுத்தி வைத்துள்ள தொகையை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பண்டிகை செலவுக்குக் கூட, குடும்பங்களில் பணம் இன்றி தவித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இரண்டரை மாதங்களாக வழங்கப்படா மல் உள்ள சம்பளத் தொகையை வழங்க வேண்டும் என்றார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், திட்ட இயக்குநரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜா கூறுகையில், அனைவ ருக்கும் சம்பள நிதி வந்துவிட்டது. இன்னும் இரண்டு நாட்களுக்குள் தொகை முழுவதும் அனைவருக்கும் வழங்கப்பட்டுவிடும் என்றார்.