கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளியன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் ஜி.கோவிந்தராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.