இளம்பிள்ளை,டிச.19- சேலம் மாவட்டம், நடுவனேரி ஊராட் சிக்குட்பட்ட தூங்கான்வளவு கிராம சாலையில் தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், நடுவனேரி ஊராட்சிக்குட்பட்ட தூங்கான்வளவு பகுதியில் 100க்கும் மேற் பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கு காக்காபாளையம் - இளம்பிள்ளை செல்லும் சாலையில் நடுவனேரி ஊராட்சி மன்ற பழைய கட்டிடம் உள்ளது. இக்கட்டிடத் திற்கு பின்புறம் கருப்பனார் கோவிலுக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடை பல மாதங்களாக சுத்தம் செய் யப்படாமல் இருப்பதால் கழிவுநீர் சாலையில் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள அரசு துவக்க பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் வசிப்பவர் களுக்கு அடிக்கடி பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகின்றது. எனவே முறையான சாக்கடை கால்வாய் அமைத்து கழிவுநீர் செல்வதற்கு வழி வகை செய்ய வேண்டுமென வலியுறுத்தி பலமுறை புகார் மனுவும், நேரில் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டன. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, முறையாக கால்வாய் அமைத்தும், கழிவுநீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறை யும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.