கோவை, அக். 27- கோவை பீளமேட்டை அடுத்துள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் சாக்கடை அடைப்புகள் முறையாக அகற்றப்படுவதில்லை. குறிப்பாக, லட்சுமி நகர் மற்றும் ஜெய்நகர் உள் ளிட்ட பகுதிகளில் பல மாதங் களாக இப்பணிகள் கிடப்பி லேயே போடப்பட்டுள்ளது. சிறு தொழிற்கூடங்களும், குடியிருப்புகளும் நிரம்பிய இப்பகுதியில் சாக்கடை கழி வுகள் ஆங்காங்கே தேங்கி யுள்ளதால் பெரும் சுகாதார சீர்கேட்டுக்கு அப்பகுதி மக் கள் உள்ளாகி வருகின்றனர். எனவே, இதுகுறித்து உடன டியாக நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.