tamilnadu

img

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் புதிய கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாணவர்கள் கோரிக்கை

உடுமலை, ஜூலை 31- உடுமலை அரசு கலைக் கல்லூரியில் புதிய வகுப் பறை கட்டிடத்தை பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென  மாணவர்கள்  கோரிக்கை விடுத்துள் ளனர். உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் 16 பிரிவு களும், முதுநிலை பட்டப்படிப்பில் 10 பிரிவு களும் உள்ளன. தரத்தில் முதல்நிலையாக விளங்கும் இக்கல்லூரியில் 3 ஆயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.  இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினை வாக கடந்த கல்வியாண்டில் தமிழக அரசு  சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து ஆய்  வகம் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி உடு மலை அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.3 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, அந்த நிதியின் மூலம் புதிதாக 20 வகுப்ப றைகள் மற்றும் 2 அறிவியல் ஆய்வ கங்கள் கட்டப்பட்டன. தற்போது கட்டு மான பணி முடிவடைந்துள்ளது. இந் நிலையில் புதிய வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகங்களை நடப்பு கல்வியாண்டிலேயே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாணவ,  மாணவியர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.