அவிநாசி, ஆக. 15- அவிநாசி ஒன்றியத் திற்குட்பட்ட வேலாயுதம் பாளையம் ஊராட்சி யில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அடிப் படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். இதுதொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில்மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப் பள்ளி எதிரில் உள்ள சேவூர்-கோபி சாலை யில் வேகத்தடை அமைக்க வேண்டும். தெருவிளக்கு அமைக்க வேண்டும். முறி யாண்டம்பாளையம் காமராஜர் நகரில் குடி நீர் பற்றாக்குறை போக்க வேண்டும். முறை யான சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். வேலாயுதம்பாளையத்தில் குடி நீர், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர வேண்டும். பொங்குபாளையம் ஊராட்சி குளத் தைத் தூர்வாரி, கரையைப் பலப்படுத்த வேண்டும். பொங்கலூர் குளத்தை தனி யார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத் தர வேண்டும். கருவலூர் இந்திரா நகர் பகுதி யில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. முன்னதாக, இந்த கிராம சபைக்கூட்டத்தில் ஒழலக்கோவில் களஞ்சியம் விவசாயம் சங்கம் சார்பில் துப்புரவுத் தொழிலாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கவுரவப்படுத்தப்பட்டு, நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. இதேபோல், ஈட்டிவீராம்பாளையத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடை பெற்றது. இதில் முட்டியங்கிணறு பகுதி யில் உள்ள குழந்தைகளின் சிரமத்தைக் குறைக்க, அப்பகுதியிலேயே அங்கன் வாடி மையம் அமைக்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் அனைத்துத் தரப்பின ருக்கும் அனைத்துப் பொருள்களும் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட ஆட் சியர், கிராம சபைக் கூட்டத்தில் பெறப் பட்ட மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார்.