tamilnadu

img

பொதுக்கழிப்பிடம் அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை

கோவை, அக்.12 – பொதுக்கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தருமாறு கோவை ஷோபா நகர் வீதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். கோவை ஆவாரம்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஷோபா நகரில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள இரு பொதுக் கழிப்பிடங்கள் முறையான பராமரிப்பு இல்லாத தால் தற்போது பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. ஆகவே, இதனை சீரமைத்திடவும், புதிய பொதுக்கழிப் பிடங்கள் அமைக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் மாநக ராட்சி அலுவலகத்திலும், வடக்கு மண்டல அலுவலகத்தி லும் மனு அளித்தனர். இருப்பினும், சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால் அப்பகுதி மக்கள் அவதியுற்று வருகின்ற னர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பொதுக் கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.