தருமபுரி, ஆக.20- வள்ளிமதுரை வரட்டாறு அணை பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பூங்கா தற்போது பராமரிப் பின்றி உள்ளதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், சித்தேரி மலைப் பகுதியில் உள்ள வள்ளி மதுரையில், கடந்த 2007ஆம் ஆண்டு வரட்டாறு அணை திறக் கப்பட்டது. இந்த அணையில் 110.3 கன அடி நீரை தேக்கி வைத்து கொள்ளலாம்.மழை காலங்களில் வரும் நீரும், சித்தேரி மலைப்பகுதிகளிலிருந்து வரும் நீரையும் இந்த அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. தற்போது வறட்சி நிலவுவதால் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தீவனங்களும் போதியளவில் கிடைப்ப தில்லை. இந்த அணையின் அருகே பல லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த பூங்கா கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டியே கிடக்கிறது. அரூர் பகுதி யில் குறிப்பிட்டு சொல்லும் வகையில், சுற்றுலா தளம் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் எதுவும் இல்லை. வள்ளிமதுரை வரட்டாறு அணை பூங்காவிற்கு, விடு முறை நாட்கள் மற்றும் ஓய்வு நேரங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வருவது வழக்கம். ஒரு சில ஆண்டுகள் மட்டுமே, பயன்பாட்டில் இருந்த இந்த பூங்காவை முறையாக பராமரிக்க, பொதுப்பணித் துறையினர் ஆர்வம் காட்டாமல் இந்த பூட்டியே வைத்துள்ளனர். இங்குள்ள சிறுவர் பூங்காவில் இருந்த மின்விளக்குகள், சிலைகள், ஊஞ்சல் உள்ளிட்ட விளை யாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேத மடைந்து அழியும் நிலையில் உள்ளது. மேலும் பூங்கா முழுவதும் பராமரிப்பு இல் லாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. எனவே பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவை மீண்டும் சீரமைக்க வேண்டும். அணையில் படகு சவாரி ஏற்படுத்த பொதுப்பணித்துறை யினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.