அன்னூர், ஜூலை 14- அன்னூர் அடுத்த பட்டக்காரன் புதூரில் அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம் இன்றி கிராம சேவை மைய கட்டிட அலுவலகத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. நகரப்புறங்களில் செயல்பட்டு வந்த இ-சேவை மையங்கள் மூலம் கிடைக்கும் வசதிகளை கிராமப்புற மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கில் கிராமப்புறங்களில் கட்டப்பட்டன. இதன்படி அ.மேட்டுப்பாளையம் ஊராட்சி யில் பட்டக்காரன்புதூரிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் மூலம் ரூ.14.50லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மையக் கட்டிடம் கட்டப்பட்டது. வருவாய் துறையினரின் சான்றிதழ்கள் பெறுவது, சமூகப் பாது காப்பு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது, போட்டித் தேர்வு களுக்கு விண்ணப்பிப்பது, ஆதார், வாக்காளர் அட்டை மற்றும் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிப்பது போன்ற சேவை கள் பட்டக்காரன்புதூர் கிராமப்புற மக்களுக்கு எளிதில் கிடைக்கும் நோக்கில் கட்டப்பட்ட கட்டிடம் தற்போது பயன் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் அரசு ஆரம்பப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பட்டக் காரன்புதூரில் அரசு பள்ளி கட்டிடம் கட்ட அஸ்திவாரம் தோண்டப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்டது. பள்ளி கட்டி டம் கட்டிய ஒப்பந்ததாரர் நிதி பற்றாக்குறை காரணமாக அஸ்திவாரத்துடன் பணியை நிறுத்தி விட்டு சென்று விட்டார். இதுதொடர்பாக அன்னூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளைச் சந்தித்து பள்ளி கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தி வந்தோம். இதனடிப்படையில் பார்வையிட வந்த அதிகாரிகள் பள்ளி கட்டிடப்பணி விரைவில் துவங்கும் எனக் கூறினார். ஆனால் இதுவரை கட்டுமானப் பணிகள் துவங்கவில்லை. எனவே மாணவர்கள் கிராம சேவை மைய கட்டிடத்தில் படித்து வரும் நிலை ஏற்பட் டுள்ளது. எனவே பள்ளிக்கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையீடு செய்து அரசு ஆரம்பப்பள்ளி கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.