tamilnadu

img

ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், செப்.20-  நாமக்கல் அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பட்டுள்ளதை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தருமாறு வலியுறுத்தி வெள்ளியன்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மாமுண்டி கிராமம் பகுதியில் உள்ள கரட்டுப்பாளையம் அருந்ததியர் தெருவில் சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் 18 சென்ட் அரசு புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த நிலத்தை மீட்க வலியுறுத்தி அரசு அதிகாரிகளிடம் அப் பகுதி மக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள், ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.   மேலும், இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு இப்பகுதி யில் சமுதாய நலக்கூடம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். இதையடுத்து கடந்த 23.10.2018 அன்று நில அளவையர் மூலம் நிலத்தை அளந்து அளவிடு செய்து அத்து  கல் நடுவதற்கு முயற்சித்துள்ளனர். அப்போது ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர் அத்து கல் நடக்கூடாது என எதிர்ப்பு  தெரிவித்துள்ளார். இதனால் நில அளவையர் அத்து கல் நடாமல் சென்று விட்டனர். இந்நிலையில், அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு  செய்து அதை மீட்டு அருந்ததியர்  மக்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.