ஈரோடு, ஏப்.3- ஈரோடு அருகே தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர் அருகே உள்ள கொளத் துப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவம்பாளையத்தில் சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வரு கிறார்கள். இப்பகுதியையொட்டி குரங்கன் ஓடை செல்கின் றது. இந்த ஓடையின் குறுக்கே தடுப்பு அணை கட்டு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பணை கட்டப்பட்டால் அருகில் உள்ள 200 வீடுகள் பாதிக்கப்படும் எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்துள்ளார்கள். ஆனால், இதுவரை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆவே சமடைந்த அப்பகுதி மக்கள் கொளத்துப்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கொளத்துப் பாளையம் ஊராட்சி தலைவர் ராஜ்குமாரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.