tamilnadu

img

சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டுக் கேடயம் வழங்கல்

திருச்சிராப்பள்ளி, நவ.17- கூட்டுறவுகளுக்குள் கூட்டுறவை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் 66வது கூட்டுறவு வார விழா சிதம்பரம் மஹாலில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் ஞாயிறு அன்று நடைபெற்றது. விழாவில் 764 பயனாளிகளுக்கு ரூ 9 கோடியே 77 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் பயிர்கடன், மத்தியக்காலக்கடன், சுய உதவிக்குழு கடன் ஆகிய கடன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் தொகை யினையும், கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ஓவியப் போட்டி, கட்டு ரைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவற்றில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கியும், 32 சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களை யும் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் விவசாயிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கரூர்

இதே போல் கரூர் மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 992 நபர்களுக்கு ரூ.5.19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை போக்கு வரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் சி.இராஜேந்திரன் தலைமையில் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களின் கீழ் 922 பயனாளிகளுக்கு ரூ.5.19 கோடி மதிப்பிலான கடனுதவி, கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், 24 கூட்டுறவு சங்கங்களுக்கு சிறந்த சங்கங்களுக்கான கேடயங்களை யும் அமைச்சர் வழங்கினார்.  நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பி னர் ம.கீதா, திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், இயக்குநர் ஆலம்தங்க ராஜ், தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கி இணைய தலை வர் மற்றும் கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.