tamilnadu

img

சேவூர் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரிக்கை

அவிநாசி மே.18அவிநாசி அடுத்த சேவூரில் வாரசந்தையில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர ஊராட்சிநிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட சேவூர் பகுதியில் கோபிசெல்லும் சாலையில் பல ஆண்டுகளாக வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வாரம்தோறும் திங்கட்கிழமையன்று கூடும் இந்த வாரசந்தையில் 200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த வாரச் சந்தையானது சேவூர் ஊராட்சி மூலம் வருடந்தோறும் ஏலம் விடப்படுகிறது. இதன்மூலம் ஊராட்சி நிர்வாகத்திற்கு இந்த சந்தை பெரும் வருவாயை ஈட்டு தந்து வருகிறது. இருப்பினும், இந்தசந்தையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், இந்த வாரச் சந்தையானது பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் அவர்கள்தோட்டத்தில் விளைகின்ற காய்கறிகள், பூக்கள், பழங்களை வாரந்தோறும் திங்கட்கிழமையன்று காலை முதல் இரவு வரை விற்பனை செய்து வருகின்றார்கள். இந்த சந்தைக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் நிலையில்போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, மழை காலங்களில் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இங்குபோதிய மேற்கூரை மற்றும் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி இல்லை. ஆகவே, இவற்றையெல்லாம் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.