tamilnadu

img

நலவாரிய பயன்களை முறையாக வழங்கிடுக

அனைத்து ஓட்டுனர் கூட்டுக்குழு மனு

கோவை, மே 11- நலவாரியத்தில் பதிவு செய்த, செய்திடாத அனைத்து ஓட்டுனர் களுக்கும் நலவாரிய பணப்பயன் களை வழங்கிட நடவடிக்கை எடுக்க கோரி வாடகை வாகன ஓட்டுனர்கள் சங்க கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். இதுறித்து, கோவை டெம்போ, டேக்சி,வேன் ஓட்டுனர் சங்க கூட்டுக் குழுவின் சார்பில்சா லைபோக்கு வரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.மூர்த்தி தலைமை யில் அளித்தமனுவில் தெரிவித்துள்ளதாவது:  

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் மோட்டர் பயணிகள் போக்கு வரத்து நிறுத்தபட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத் திற்கும் மேற்பட்ட வாகன தொழிலா ளர்கள் பாதிக்கப்பட்ட நிலை யில் நலவாரியத்தில் பதிவு செய்தவர் களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில், அரசு அறிவித்த நிவாரண தொகை முழுமையாக கிடைக்க பெறவில்லை எனவும் நல வாரியத்தில் பதிவு செய்யாதவர் களுக்கும் நிவாரணம் கிடைக்க பெற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி்னர்.  மேலும், இதுதொடர்பாக அவர் கள் கூறுகையில் ஊரடங்கு காரண மாக வாகனங்களை இயக்க முடியாத சூழலில் சாலை வரி, தகுதி சான்று, இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் புதுப் பித்தல், அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் பெற்ற கட னுக்கு ஆறு மாதம் விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் பொது போக்கு வரத்து ஓட்டுனர்கள் கேரள மாநிலம் செல்லும் போது காலதாமதம் ஏற்படு வதை தவிர்த்து பெட்ரோல் பங்கு களில் முககவசம், கையுறை, கிருமி நாசினி வழங்கிட வேண்டும் என்ற னர்.