tamilnadu

img

சுகி, சுமோட்ட உணவு சேவகர்களுக்கு சட்ட சமூக பாதுகாப்பு வழங்கிடுக

கோவை, ஆக. 8– உணவகங்களில் உணவை பெற்று மக்க ளிடம் கொண்டு சேர்க்கும் உணவு சேவர்களுக்கு சட்ட சமூகபாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர் மானம் நிறைவேற்றப்பட் டது. சிஐடியு கோவை மாவட்ட லாட்ஜ், ஹோட் டல் மற்றும் பேக்கரி தொழிலாளர் சங்கத்தின் 12 ஆவது மாவட்ட மாநாடு காட்டூர் மில் சங்க கூட்டரங்கில் வியாழ னன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் கே.மனோகரன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டு கொடியை சங்கத்தின் நிர்வாகி வி.நாகராஜன் ஏற்றிவைத்தார். பி.தங்க ராஜ் வரவேற்புரையாற்றினார். மாநாட்டை  துவக்கிவைத்து சிஐடியு மாவட்ட செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உரையாற் றினார். மாநாட்டை வாழ்த்தி வழக்கறிஞர் பி.ஜோதிகுமார் உரையாற்றினர். சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ.எல்.ராஜா, பொருளாளர் கே.சந்தோஷ் ஆகி யோர் அறிக்கையை முன்வைத்து பேசினர். இதனைத்தொடர்ந்து அறிக்கை மீதான விவாதத்தை பிரதிநிதிகள் முன்வைத்தனர். முன்னதாக மாநாட்டில் புதிய நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலை வராக கே.மனோகரன், பொதுச்செயலாள ராக ஏ.எல்.ராஜா, பொருளாளராக கே.சந் தோஷ்குமார் மற்றும் துணை நிர்வாகிக ளாக பி.தங்கராஜ், கே.ராமலிங்கம், வி.நாக ராஜன், பி.ஆறுமுகம், ராமச்சந்திரன், புரு சோத்தமன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப் பட்டனர். 

தீர்மானங்கள் 
கோவை மாவட்டத்தில் சுமார் பத்தா யிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுகி, ஊப்பர், சுமோட்ட போன்ற நிறுவனங்க ளின் மூலமாக உணவகங்களில் உணவு சேகரித்து பொதுமக்களுக்கு உணவு சேவை யாற்றி வருகின்றனர். ஆண்ட்ராய்டு செல்பேசி மற்றும் இருசக்கர வாகனம் இவை மட்டுமே மூலதனமாக கொண்டு பணி யாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும் பாலானோர் பட்டதாரிகளாக உள்ளனர்.  இவர்களுக்கு எவ்வித சட்டசமூக பாது காப்பும் இல்லாத நிலை உள்ளது- தமிழக அரசு இவ்வூழியர்களை முறைசாரா நல வாரியத்தில் பதிவு செய்து, உரிய சட்ட சமூக பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.  கிளப் மற்றும் தங்கும் விடுதிகளில் பணி யாற்றும் தொழிலாளர்களை தமிழ்நாடு 1958 ஹோட்டல் உணவு நிறுவன சட்டத் தின் கீழ் இணைக்க வேண்டும். முறைசாரா  நலவாரியத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்த வேண்டும். முன்னணி ஹோட்டல்களில் பணியாற்றும் தொழிலா ளர்களுக்கு ஊதிய உயர்வை நிர்வாகம் அறி வித்துவிட்டு, மறுபுறம் உயர்த்திய தொகையை உணவுக்கு பிடித்தம் செய்கிற  நிலை உள்ளது. உணவகங்களின் இத்த கைய சுரண்டல் நடவடிக்கையை உடன டியாக கைவிட வேண்டும்.  குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் கோவை  மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான உணவக தொழிலாளர்கள் பங்கேற்றனர்.