கோவை, ஆக. 24 – கொரோனா நிவாரணமாக அனைத்து மக்களுக்கும் ரூ.7,500 நிவாரணம் வழங்கக்கோரி கோவையில் 125 இடங்களில் செவ்வாயன்று (இன்று) ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ7,500 நிவாரணம் வழங்கக் கோரியும், வேலையின்மை, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் மார்க் சிஸ்ட் கட்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவின் அறை கூவலை ஏற்று செவ்வாயன்று (இன்று) கோவை மாவட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு, மாவட்டக்குழு, இடைக்குழு செயலாளர்கள் தலைமை யில் 125 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும், என தெரிவித்துள்ளார்.