கோவை, செப். 19- கொரோனா தொற்று பரவலை தடுக்க போதிய சுகாதார வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும், தொற்று பரவலை தடுப்பதற்கு போதிய அக்கறை காட்டாமல் மெத்தனமாக செயல்படும் மாநில அரசை கண்டித்தும் வருகிற செ.22 ஆம் தேதியன்று இஎஸ்ஐ மற்றும் அரசு மருத்துவமனைகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் சனியன்று ஆர்.வேலுச் சாமி தலைமையில் நடைபெற்றது. இதில், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப் பட்டது, கோவையில் கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்ப டுத்தி வருகிறது. மாநில அரசும், மாவட்ட பொது சுகாதார நிர்வாக மும் சிகிச்சை அளிப்பதில் உள்ள மெத்தனத்தினால் மக்கள் அச்சத் தோடு வாழ வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. அண்மைகாலமாக அரசு மருத்து வமனையிலும், இஎஸ்ஐ மருத்துவ மனையிலும் நோயாளிகள் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், படுக்கை வசதி குறைவு கார ணமாக நோயாளிகள் பெரும் சிரமப் படுகின்றனர். அதேபோல், கழிப் பறை பராமரிப்பு மோசமாக இருக் கிற காரணத்தினால் நோயாளிகள் பெரும் சிரமப்படுகின்றனர். இதே போன்று கொரோனா பரிசோ தனை முடிவு வருவதில் காலதாமத மாகின்ற காரணத்தினாலும், தொற் றுக்குள்ளவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்யாமல் அவர்களையே மருத்துவமனைக்கு வரச் சொல்லு கிற நிலையும் உள்ளது. இதனால் நோய்த்தொற்று அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.
மேலும், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி களை சிகிச்சை அளித்து குணம டைந்தவர்களை மீண்டும் பரிசோ தனை செய்யாமல் வீட்டிற்கு அனுப் புவதால் நோய்த்தொற்று குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்படுகிறது. இவ்வாறு மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மெத்த னத்தை கண்டித்தும், இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிகிச்சை பற்றாக்குறை காரணமாக நோயாளிகளை அலைக்கழிப்பதை ஒழுங்குபடுத்தவும், கூடுதல் ஆக்சி ஜன் சிகிச்சை வசதிகள் மேம்படுத் தவும், இரு மருத்துமனையில் கழிப் பறை பராமரிப்பு, சுகாதாரத்தை மேம்படுத்திட துப்புரவு பணியாளர் கள் எண்ணிக்கையை கூடுதல்ப டுத்த வேண்டும்.
நோய்த்தொற் றுக்கு உள்ளானவர்களை அரசு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல் வதை உறுதிப்படுத்த வேண்டும். நோயாளிகளுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்த பின்னரே டிசார்ஜ் செய்திட வேண்டும். கொரோனா சிகிச்சை மையங்களில் மேம்பட்ட சிகிச்சை முறைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வரு கிற செப்.22 ஆம் தேதியன்று (செவ்வாய்கிழமை) இஎஸ்ஐ மற் றும் அரசு மருத்துவமனைகள் முன் பாக முற்றுகை போராட்டம் நடத் தப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.